இலங்கையிலிருந்து திருச்சிக்கு புதிய விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
மலேசியா சிங்கப்பூர் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு திருச்சியிலிருந்து அதிக அளவிலான விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் வளைகுடா நாடுகளிலிருந்தும் திருச்சிக்கு அதிக அளவில் பயணிகள் இலங்கை வழியாக வந்து செல்கின்றனர். ஆகவே இலங்கையில் இருந்து திருச்சிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சார்பில் காலை மற்றும் மதிய நேர சேவை இயக்கப்பட்டு வந்தது. தற்போது இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மதிய நேரத்தில் இயக்கப்பட்டு வந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டு காலை நேரத்தில் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கொழும்பியாவில் இருந்து திருச்சிக்கு மற்றொரு விமானமான பிக்ஸ் ஏர் நிறுவனத்தின் சார்பில் புதிய விமான சேவை இயக்கப்பட்டுள்ளது. இதன் நேரப்பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும், சீக்கிரமாகவே முன்பதிவு தொடங்க இருப்பதாகவும் விமான நிலையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவையின் மூலம் வளைகுடா நாடுகளிலிருந்து திருச்சிக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.