90 அடியை நெருங்கும் மேட்டூர் அணை நீர் மட்டம்……!!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது 90 அடியை நெருங்கியுள்ளது.

கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக  அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி வந்த நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன  அடியாக உயர்ந்துள்ளது.

நீர் மட்டம் காலை 85 அடியாக இருந்த சூழலில் 4.4 அடி அதிகரித்து தற்போது 89.4 அடியாக அதிகரித்துள்ளது. 90 அடியை நெருங்க இருக்கும் அணையின் நீர் மட்டம் நாளை மாலைக்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது .தற்போது மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.