மனைவி மீது தாக்குதல்…. மருந்து விற்பனை பிரதிநிதி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியில் ஜெயப்பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இவர் துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த ஜெயபிரகாஷ் தனது மனைவியை கீழே தள்ளிவிட்டார். இதனால் ரேவதிக்கு தலையில் காயம் ஏற்பட்டு வலியில் அலறி துடித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயபிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply