முக கவசம் அணியாத 366 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வெளியே சுற்றி திரிபவர்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அதன்படி காவல்துறையினரும், சுகாதார அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் முக கவசம் அணியாத 366 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வுகளை காவல்துறையினர் ஏற்படுத்தினர்.