அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தில் பழனிச்சாமி-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் வல்லரசு ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 22-ஆம் தேதி காஷ்மீரில் நடைபெற்ற தடகள போட்டியில் வல்லரசு கலந்து கொண்டார்.
இந்நிலையில் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து வல்லரசு சாதனை படைத்தார். இதனையடுத்து தங்க பதக்கத்துடன் சொந்த ஊர் திரும்பிய வல்லரசுவிற்கு ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் மேள தாளத்துடன் வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.