காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்…? கணவர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருக்கும் பொரிகடலை தயாரிக்கும் கடையில் நாகராஜ் என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நாகராஜன் பேன்சி கடையில் வேலை பார்த்த 20 வயதுடைய இளம்பெண்ணும் நாகராஜும் காதலித்து வந்தனர். மேலும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 15-ஆம் தேதி வடமதுரை முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு எரியோடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது உடன்பாடு ஏற்படவில்லை. ஆனாலும் இரண்டு பேரும் மேஜர் என்பதால் சேர்ந்து வாழும் படி அனுப்பி வைத்தனர். மேலும் பெற்றோரிடமும் அவர்களுக்கு இடையூறு அளிக்க கூடாது என எழுதி வாங்கிக் கொண்டனர்.

அதன் பிறகு நாகராஜ் தனது மனைவியுடன் வடமதுரையில் இருக்கும் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளம்பெண்ணின் உறவினர்கள் அவரை கடத்தி சென்றனர். இதுகுறித்து நாகராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply