தாது ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்ததால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சண்டிகர் மாநிலத்திலிருந்து இரும்பு தாதுக்கள் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று தர்மபுரி மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மதுரை மாவட்டத்தை சேர்ந்த டிரைவரான சுரேஷ் குமார் ஓட்டி வந்துள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென சாலையின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய டிரைவர் பலத்த காயமடைந்தார். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தொப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு பொக்லின் மற்றும் கிரேன் மூலம் கவிழ்ந்த லாரியை காவல்துறையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.