தரையிறங்க தாமதம்… நாய்க்காக காத்திருந்த விமானம்..!!

கோவா விமான ஓடுதளத்தில் நாய்கள்  இருந்த காரணத்தினால் ஏர் இந்தியா விமானம் தரை இறங்க முடியாமல் கடைசி நேரத்தில் தடைபட்டது.

கோவாவின் டபோலி சர்வதேச விமான நிலையத்திற்கு  நேற்று மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்துள்ளது. அதிகாலை 3 மணி அளவில் அந்த விமானம் தரையிறங்க இருந்த  நிலையில் விமான ஓடுதளத்தில் நாய்கள் இருப்பதை விமானி பார்த்துள்ளார். உடனடியாக விமானத்தை தரையிறக்குவதை நிறுத்திய விமானி  வானத்திலேயே வட்டமடித்து கொண்டிருந்தார்.

Image result for air india

இதையடுத்து ஓடுதளத்தில் நாய்கள் இருப்பதை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து ஓடு தளத்தில் இருந்த நாய்கள் விரட்டப்பட்டு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.  அதிகாலை நேரம் என்பதால் நாய்கள்  ஓடுதளத்திற்குள்  சென்றதை அதிகாரிகள் பார்க்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓடுதளத்தில் நாய்கள் மற்றும் பறவைகள் நுழைவதை தடுக்க கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.