குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கல்லாங்குத்து பகுதியில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு நாகதேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நாகதேவிக்கு அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவர் மனைவி போல வாழ்ந்து வந்தனர்.

நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது அந்த நபர் கத்தியால் நாகதேவியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த நாகதேவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply