அரசு பேருந்து மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் செபஸ்தியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோணிக்கம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே கிளம்பிய ரோணிக்கம் தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது மதுரை நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து இந்த பெண் மீது பலமாக மோதி விட்டது.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ரோணிக்கத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரோணிக்கம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.