“தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தென்காசியில் பரபரப்பு….!!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள செட்டிகுளம் வடக்குத் தெருவில் சாமுவேல்-மரகதம் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் மனநலம் பாதிக்கப்பட்ட மரகதம் சிகிச்சை பெற்று மாத்திரை, மருந்து சாப்பிட்டு வந்தார். இந்நிலையில வீட்டில் தனியாக இருந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.