நீண்ட நாட்களாக வரதட்சணை கொடுமை… மனமுடைந்த பெண்… கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு…!!

வரதட்சணை கொடுமையால் தற்கொலை முயற்சி செய்த பெண்ணின் கணவர் உட்பட 4 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே காங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சசிகலா. இத்தம்பதியினருக்கு  4 வயதில் சூர்யா என்ற  பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சசிகலாவை  அவரது கணவர் கணேசன் , மாமனார் சாமிநாதன் , மாமியார் கல்யாணி  மற்றும் கணேசனின் உறவினர் உஷா ஆகிய 4 பேரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த சசிகலா விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சசிகலா மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சசிகலா  அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்த  புகாரின் பேரில் காவல்துறையினர் சசிகலாவின் கணவர்   உட்பட 4 பேர் மீது  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.