உதவித்தொகை வேணுமா?… இதோ விண்ணப்பிக்க எளிய வழி…. அதிகாரி வெளியிட்ட சூப்பர் தகவல்…!!

தமிழ்நாடு அரசு மூலமாக தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், 2022-2023-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு விண்ணப்பிக்க தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி 1.1.2022 நாளன்று 58 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும் எனவும் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்படிவத்தை நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொண்டு, மேலும் தாலுகா அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச்சான்று, தமிழ்ப்பணி ஆற்றியதற்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழ் அறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இதனையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என்றும் நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக 3,500 ரூபாய் பணம் மற்றும் மருத்துவப்படி 500ரூபாய்  ஆக மொத்தம் 4000 ரூபாய்  வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுகிறது.