அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா….. முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரத்திற்கு அருகே உள்ள ஊராங்காணி கிராம அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா தலைமையில் நடைபெற்றது. மேலும் இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா, ஒன்றிய கவுன்சிலர் தெய்வானை, ஆசிரியர் அன்புக்கரசி ஆகியோர் முன்னிலை வகித்த நிலையில், வானவில் மன்ற கருத்தாளர் கலைவாணி வரவேற்றார்.

இதனையடுத்து பொதுமக்களிடையே அறிவியல் குறித்த விழிப்புணர்வு மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் ரேவதி, மணிமேகலை, வித்யா மற்றும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.

Leave a Reply