உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்காவில் இருந்து 78 ஆப்பிரிக்க அகதிகள் படகுமூலம் இத்தாலிக்கு வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வந்த படகு நடுக்கடலில் பழுதாகி நின்று விட்டது. இது குறித்து இத்தாலியின் கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் பேரில் கடலோர காவல் படையினர் கப்பல் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சென்று மூழ்கிக் கொண்டிருந்த படகில் இருந்து சிறுவர்கள், சிறுமியர்கள், கர்ப்பிணி பெண்கள் உட்பட 78 பேரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இவர்கள் தற்போது அகதிகள் முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.