எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகத்தில் தரமான உணவு கிடைக்கவில்லை. அம்மா உணவகம் பட்டு போயிருந்தது அது கெட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் அதை கையில் எடுத்ததற்கு பழனிசாமி வரவேற்று இருக்க வேண்டும், பாராட்டிருக்க வேண்டும். வஞ்சக எண்ணத்தோடு குறுகிய புத்தியோடு அதை விமர்சனம் செய்வதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அம்மா உணவகம் விவகாரம் குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.