ஜம்முவில் பயங்கரவாதிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த போலீஸ்க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக ஜம்மு டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை விடப்பட்டன.இந்நிலையில் காஷ்மீரில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் தொடங்கியுள்ளதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் கடந்த ஐந்தாம் தேதி முதல் முடக்கப்பட்டு இருந்த தொலைத் தொடர்பு சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜம்மு டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில் , மாநில போலீஸ், துணை ராணும், ராணுவம் அடங்கிய பாதுகாப்பு குழு என அனைவரும் அற்புதமாக வேலை செய்தனர். அவர்களுக்கு இவ்வளவு நாட்கள் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்ததற்கு நன்றியை தெரிவித்தார்.
ஒருபக்கம் பயங்கரவாதிகளை நுழையாமல் தடுப்பு நடவடிக்கை மற்றொரு மக்கள் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்த சில பயங்கரவாதிகள் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். பயங்கரவாதிகள் பொது மக்களை தவறாக வழிநடதாமல் இருக்க பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.