பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் சாவர்க்கர் குறித்து இழிவாக பேசக்கூடாது எனவும் அப்படி பேசுவது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் என உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து உத்தவ் தாக்கரே கூறியதாவது, அந்தமான் சிறையில் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு பல கொடூரங்களை 14 ஆண்டுகள் சாவர்க்கர் அனுபவித்து வந்தார். அதுவும் ஒருவிதமான தியாகம் தான். அவருடைய பாதிப்புகளை நாம் வாசிக்க மட்டுமே செய்கிறோம். சாவர்கரை இழிவு படுத்துவதை ஒரு போதும் சகித்துக் கொள்ள மாட்டோம். அவர் எங்களின் கடவுள் நாம் போராட தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எங்களின் கடவுளை இழிவுபடுத்துவது என்பது சகித்துக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.