நாமக்கல்லில் இறப்பு சான்றிதழ் வழங்க ருபாய் 4,500 லஞ்சம் கேட்ட அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் என்னும் பகுதியில் சார்பதிவாளர் அலுவலக இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் காந்திமதி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 1995ம் வருடம் இறந்த தங்கம்மாள் என்பவரின் இறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு ரூபாய் 4500 லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை காந்திமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது அப்பகுதியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.