ஏழ்மையின் காரணமாக சிறு சிறு குழந்தைகள் ரோட்டோரம், பீச் போன்ற இடங்களில் வியாபாரம் செய்வதை பார்த்திருப்போம். அதேபோன்று பீச்சில் சிறுவன் ஒருவன் அப்பளம் விற்று உள்ளார். அவர் தனது சுயமரியாதையை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சிறுவனிடம் ஒருவர் வந்து பேசுகிறார். அப்போது அந்த சிறுவன் என்னால் இதுவரை அப்பளத்தை விற்க முடியவில்லை என்று கூறுகிறார். இதற்கு அவர் அப்பளம்  எவ்ளோ என்று கேள்வி கேட்கிறார். அதற்கு ஒரு பாக்கெட் 30 ரூபாய் என்று கூறுகிறார். உடனே  அந்த நபர் 5 ரூபாய்க்கு அப்பளம் தருமாறு கேட்கிறார்.

இதனால் சிறுவன் தயங்கிய போதும் சிறிது நேரம் கழித்து தருகிறேன் என்று கூறுகிறார். பின்னர் அந்த நபர் 500 ரூபாய் கொடுத்து அவரிடம் உள்ள அனைத்து அப்பளம் பாக்கெட்டையும் கேட்டுள்ளார். இதனால் சிறுவன் மகழ்ச்சி அடைந்தாலும், தனது சுயமரியாதையை வெளிப்படுத்தினார். அதாவது அவர் கொடுத்த அதிகப்படியான பணத்தை ஏற்க மறுத்து சிறுவன் நான் வேலை பார்க்கிறேன், ஆனால் பிச்சை எடுக்கவில்லை என்று கூறினார். உடனே அந்த நபர் உனது குடும்பச் செலவுக்காக இதை ஏற்றுக் கொள்ளும்படி கூறினார். அவரது வற்புறுத்தற்கு பின்னால் சிறுவன் அந்த பணத்தை ஏற்றுக் கொள்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இதற்கு பயனர்கள் வளரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.