“இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட அனுமதி கிடையாது”…. தமிழக மீனவர்களுக்கு…. எச்சரிக்கை விடுத்த இலங்கை மந்திரி….!!!!

இலங்கை நாட்டின் மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ் ஆவார். இவர் வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்களுடன் கலந்துரையாடலின் ஈடுபட்டு அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களின் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது ஒரு செய்தியாளர் அவரிடம் “தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் பிடிக்கப்பட்டது” குறித்து கேட்டுள்ளார். இதற்கு அவர் கூறியதாவது “இலங்கை கடற்படப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது.

பாஸ் நடைமுறையும் இல்லை. மேலும் தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தமிழக பாஜக தலைவரிடம் நட்பு ரீதியாகவும் அதிகார ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் இந்திய ஊடகவியலாளர் நேரடியாக இங்கு வந்து செய்திகளை சேகரித்து நிலைமைகளை பார்த்துவிட்டு செல்லட்டும். அப்போதுதான் இந்திய மக்களுக்கு இலங்கையில் உள்ள நிலைமை புரியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply