விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் வெற்றியோ தோல்வியோ கற்றுக் கொடுத்ததை விட அவமானங்கள் நிறைய கற்றுக் கொடுக்கின்றது என ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் பிஸ்மி விக்னேஷ் சிவன் பகிர்ந்திருந்த பதிவு குறித்து தனது கருத்தை கூறியுள்ளார்.
விக்னேஷ் சிவன் அஜித் படத்திலிருந்து வெளி ஏறியதை பெரிய அவமானமாக நினைக்கிறார் என்றால் தன்னைப் பொறுத்தவரை அது ஒரு காமெடியாக தெரிகிறது எனக் கூறினார். நயன்தாரா என்ற ஒருவர் இல்லை என்றால் இன்று விக்னேஷ் சிவனை நாம் தேடுகின்ற அளவிற்கு தான் இருந்திருப்பார் என்றும் அவர் கூறியிருந்தார்.