“ராஜினாமா முடிவில் தெளிவாக உள்ளேன்” ராகுல் காந்தி பேட்டி …!!

ராஜினாமா குறித்து என்னுடைய முடிவை தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளேன் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமோதி தொகுதியில் தோல்வியடைந்தார்.காங்கிரஸ் கட்சியின் தோல்வியையடுத்து அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் பொறுப்புகளில்  இருந்து விலகினர். அதே போல தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தியின் தலைவர் பொறுப்பில் இருந்து  விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார்.ஆனால் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு அவரின் ராஜினாமை ஏற்க மறுத்து வருகின்றது.

Image result for ராகுல் காந்தி

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தனது ட்வீட்டர்  பக்கத்தில் இப்போதைய சூழ்நிலையில் ராகுல் காந்தியால் மட்டுமே காங்கிரஸ் கட்சியை வழிநடத்த முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், நாட்டிற்கும், நாட்டு மக்களுக்குமான நலனுக்கு அவருடைய அர்ப்பணிப்பு சமரசமில்லாதது, ஒப்பிடமுடியாதது, எனப் பதிவிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி  கூறுகையில் , நான் என்னுடைய முடிவை தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளேன், நீங்கள் அனைவரும் அதை அறிவீர்கள்” என  தெரிவித்துள்ளார்.