செட்டிநாடு வத்தல் குழம்பு
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பூண்டு – 50 கிராம்
சுண்டு வத்தல் – 10
தக்காளி – 1
புளி – எலுமிச்சையளவு
குழம்பு மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
கடுகு – 1 /4 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 /4 தேக்கரண்டி
சீரகம் – 1 /4 தேக்கரண்டி
மிளகு – 1 /4 தேக்கரண்டி
வெந்தயம் – 1 /4 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை:
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்தம் பருப்பு , சீரகம் , மிளகு , வெந்தயம் , பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் தக்காளி , குழம்பு மிளகாய்த்தூள், புளிக்கரைசல், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.கடைசியாக சிறிது எண்ணெயில் சுண்டைக்காய் வற்றலை பொறித்து குழம்பில் கொட்டி இறக்கினால் சுவையான செட்டிநாடு வத்தல் குழம்பு தயார் !!!