”திருமணத்திற்கு மறுப்பு” காதலன் கண் முன் காதலி தற்கொலை…!!

கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த காதல் திருமணம் செய்ய மறுத்ததால் அவரது கண் முன்னேயே காதலி தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.

கள்ளக்குறிச்சியில் ஐந்தாண்டுகளாக நகமும் , சதையுமாக காதலித்து வந்த நிலையில் காதலன் கண்முன்னே 80 அடி ஆழ கிணற்றில் குதித்து திடீரென காதலி தற்கொலை செய்து கொண்டுள்ளார் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிக்கண்ணு வின் மகள் 22 வயதான நிஷா.  நிஷா செவிலியர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு சங்கராபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். கடந்த திங்கட்கிழமை வீட்டின் பின்புறம் உள்ள 80 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் கிணற்றுக்குள் கிடந்த நிஷாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மல்லாபுரத்தைச் சேர்ந்த 23 வயதான இளையராஜாவும் , நிஷாவும் 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தது தெரியவந்தது. இருவரின் காதல் பெற்றோர் , கிராம மக்கள் என அனைவருக்கும் தெரிந்ததால் தனிமையில் அவர்கள் அடிக்கடி சந்தித்து வந்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இளையராஜாவின் தாய் அம்பிகா கடந்த 10 நாட்களுக்கு முன் நிஷாவின் ஊருக்கு வந்து இளையராஜா-நிஷா காதலுக்கு அம்பிகா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் நிஷாவை இளையராஜா திருமணம் செய்து கொள்ள  முடியாது எனவும் கூறியுள்ளார். இதனால் திங்கட்கிழமை மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டு இரவு வீடு திரும்பிய நிஷாவை இளையராஜா செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.நிஷாவின் வீட்டிற்கு பின்புறம் உள்ள கம்பு காட்டிற்கு அவசரமாக வரச் சொல்லியுள்ளார்.அங்கு வந்த நிஷாவுடன் இளையராஜா பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது தனது தாய் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து நிஷாவிடம் இளையராஜா கூறியுள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொள்ள இளையராஜா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த நிஷா வேகமாக ஓடிச்சென்று அருகிலிருந்த 80 அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது இதையடுத்து போலீசார் இளையராஜாவை கைது செய்தனர்.ஊரறிய 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திடீரென காதலர் கைவிட்டதால் மனமுடைந்த காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.