கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற இளம் பெண் மருத்துவர் ராட்சஅலையில் சிக்கி உயிரிழந்தார்.
ஆந்திராவில் ஜக்கையா பேட்டையை சேர்ந்தவரான இளம்பெண் மருத்துவர் ரம்யா கிருஷ்ணா, கோவா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை கோவா கடற்கரைக்கு சென்றார். அங்கு அவர் கடலை பின்புலமாகக் கொண்டு தமது செல்போனில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது திடீரென எழுந்த ராட்சத கடல் அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. உடனே இதனை கண்ட மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்க போராடினர். போலீசாரும் அவர்களுடன் சேர்ந்து போராடினர்.

ஆனால் அவரை பிணமாகவே மீட்க முடிந்தது. இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான ஜக்கையா பேட்டைக்கு இன்று காலை இறுதிச் சடங்குகளுக்காக கொண்டு வரப்பட்டது. மருத்துவம் படித்து அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த இளம்பெண்ன் செல்பி மோகத்தால் உயிரிழந்ததை எண்ணி அந்த ஊரே சோகத்தில் மூழ்கியுள்ளது.