தமிழக மீனவர்கள் 4 பேருக்கு செப்.3 வரை நீதிமன்றக் காவல்..!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரும்  செப்.3 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.     

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 232 விசைப்படகுகளுடன் நேற்று காலை  கடலுக்குச் மீன் பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு விசைப் படகில் சென்ற உரிமையாளர் மணிகண்டன், பாலகிருஷ்ணன், கார்த்திக், சதீஷ், ஆகியோர் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமார் 35 கடல் மைல் தூரத்தில் இரவு 11: 30 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

Image result for புதுக்கோட்டை மீனவர்கள்

அப்போது  அங்கு வந்த  இலங்கை கடற்படையினர் விசைப்படகையும் 4 மீனவர்களையும் வழக்கம் போல சிறைப்பிடித்து, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து, அங்குள்ள காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரையும் செப்.3 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.