விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் பகுதியில் விவசாயியான திருமலை வசித்து வந்துள்ளார். இவருக்கு கலா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் திருமலைக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. எனவே அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த திருமலை தனது வீட்டின் அருகே உள்ள முட்புதரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் திருமலையின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.