வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம் கொத்தமங்கலம் பகுதியில் ஆற்று ஓரத்தில் குடியிருப்புகள் உள்ளன. இங்கு உள்ள தரைப்பாலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அடித்து செல்லப்பட்டது. இதனால் காமராஜபுரம் கரையோர குடியிருப்புக்கள் சேதமடைந்த தோடு அங்கிருந்த வீடுகளும் தண்ணீரில் முழுவதுமாக மூழ்கியுள்ளன. அதோடு 25-க்கும் மேற்பட்ட வீடுகள் அபாயகரமான நிலையிலும் உள்ளன.
இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார், துணை தாசில்தார், வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடி இருந்தவர்களை மீட்டு தனியார் மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.