தமிழகத்தில் மழை “மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” வானிலை ஆய்வு மையம் ..!!

தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் , தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழைக்கும், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதோடு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும்.

Image result for வானிலை ஆய்வு மையம்

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவை பொறுத்தமட்டில், நீடாமங்கலத்தில் 4 சென்டி மீட்டரும், திருவாரூர், அதிராமப்பட்டினத்தில் 3 சென்டிமீட்டரும், வல்லம், மதுக்கூரில் 2 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரி ஆகிய கடல் பகுதிகளில்  மணிக்கு 40_தில் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவே அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.