சென்னை பெரவள்ளூர் பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது மகன் டேவீட்டுடன் அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக நடுரோட்டில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சதீஷ் மற்றும் பாலாஜி ஆகியோர் ஒரு தம்பதியை வழிமறித்து மிரட்டி தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனை அந்தோனியும் அவரது மகன் டேவீட்டும் தட்டி கேட்டுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் இருவரும் அந்தோணி மற்றும் அவரது மகன் டேவீட்டை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதனையடுத்து டேவீட்டும் வீட்டிற்கு செல்ல முயன்றுள்ளனர். அப்போது தெருவிளக்கை அணைத்துவிட்டு கும்பலாக வந்த சதீஷின் கூட்டாளிகள் அந்தோணியையும் டேவீட்டையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து அந்தோணி பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வகுமார், அவருடைய மகன் பாலாஜி மற்றும் சுரேஷ் ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சதீஷ் மற்றும் கூட்டாளிகள் சிலரை காவல்துறையினர் வலைசி தேடி வருகின்றனர்.