வேதாரணியத்தில் 27-ஆம் தேதி இ.பி.எப் குறைதீர்க்கும் முகாம்… முதன்மை ஆணையர் வெளியிட்ட தகவல்…!!!!!!

வருகிற 27-ஆம் தேதி வேதாரணியத்தில் இபிஎப் தொடர்பான குறைதீர்க்கும் முகம் நடைபெறுகிறது என மண்டல முதன்மை ஆணையர் முருகவேல் கூறியுள்ளார். இது குறித்து திருச்சி மண்டல இபிஎப் முதன்மை ஆணையர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இபிஎப் சார்பில் நிதி ஆப்கே நிகதி என்னும் பெயரில் இபிஎப் தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 27-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை நாகை மாவட்டத்திற்கான குறைதீர்க்கும் முகாம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் இபிஎப் தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது.

மேலும் செட்டில்மெண்ட் பெறுவது, வெவ்வேறு இபிஎப் கணக்குகளை ஒரே கணக்கில் இணைப்பது, இபிஎப் சந்தாதாரர்கள் தங்களது யு ஏ என் கணக்கினை பயன்படுத்தும் முறை, ஆதார் வங்கி கணக்குகள் உள்ளிட்ட தங்களது சுய விவரங்களை தங்களது யு ஏ என் கணக்கில் இணையத்தில் தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இந்த முகாமில் ஓய்வூதியதாரர்கள் மின்னணு உயிர்வாழ் சான்று பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சந்தாதாரர்கள் தங்களது பெயர் மாற்றக் கோரிக்கை போன்ற அனைத்து கோரிக்கைகளையும் தகுந்த ஆதாரங்களுடன் எழுத்துப்பூர்வமாக முகாமில் சமர்ப்பிக்கலாம். தொழில் நிறுவனங்களின் முதலாளிகள் இபிஎப் சந்தாதாரர்கள், முகவர்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற தொழில் நிறுவனங்களின் உறுப்பினர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.