லாரி ஓட்டுனர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வல்லரசு. இவர் வெளியூரில் தங்கி லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வல்லரசு பொங்கல் பண்டிகைக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து ஊருக்கு வந்திருந்த மறுநாளே இவர் அப்பகுதியிலுள்ள வயலில் இறந்து கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வல்லரசுவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.