பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பிக்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நடத்தப்பட்டு நேற்று முன்தினம் வாக்கு எண்ணப்பட்டது . இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 இடங்களில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதில் திமுக போட்டியிட்ட 23 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக எம்.பிக்களான கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா, டி.ஆர் பாலு உள்ளிட்ட எம்.பிக்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் அனைவரும் உழைப்பாளர் சிலையிலிருந்து பேரணியாக வந்து அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதையை செலுத்தினர். சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏக்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டு தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.