தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் இருப்பவர் அர்ஜுன். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் தமிழில் முன்னணி ஹீரோவாக ஜொலித்த நடிகர் அர்ஜுன் தற்போது படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கேரளாவில் பாலியல் தொல்லைகள் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பாக பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்தினை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் அர்ஜுனன் தன் கருத்தினை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, பொதுவாக திரைத்துறையில் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதை ஒருவரால் நிறுத்த முடியாது. எனவே தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பல்வேறு துறைகளிலும் அப்பாவி பெண்கள் பலர் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் இந்த பிரச்சனைக்கு சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்று கூறினார்.