அரசு பூங்கா குளத்தில் தவறி விழுந்து தத்தளித்த மான்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா அரசின் தோட்டக்கலைத்துறை பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள மலர் அருவி, கண்ணாடி மாளிகை, தொங்கு பாலம் ஆகியவற்றை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடமான் ஒன்று பூங்காவில் எட்டு அடி ஆழமுள்ள மீன்கள் வளர்க்கும் குளத்தில் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தத்தளித்தது. இது குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மானை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மான் வனப்பகுதியில் விடப்பட்டது.