மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தனியார் கடையில் மருந்து வாங்க பரிந்துரைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் வனிதா எச்சரித்துள்ளார்.
மதுரை மாவட்ட அரசு மருத்துவமனையில் தினமும் 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான மருந்துகள் மருத்துவமனையின் மருந்தகங்களில் வழங்க வேண்டும் என்பது அரசின் கடமை. ஆனால் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் குறிப்பிட்ட மாத்திரைகளை தனியார் மருந்து கடைகளில் வாங்கிக்கொள்ளும்படி நோயாளிகளிடம் பரிந்துரைப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடை காரணமாக இறந்த 3 நோயாளிகளில் ஒருவருக்கு தேவையான மருந்துகளை வெளியில் உள்ள மருந்து கடைகளில் வாங்க பரிந்துரைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
