மக்களே உஷார்…! நூதன முறையில் நிதி நிறுவன அதிபரிடம் ரூ.2.40 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பனையக்குறிச்சி பகுதியில் நிதி நிறுவன உரிமையாளரான உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1- ஆம் தேதி உதயகுமாரின் செல்போன் எண்ணிற்கு மர்ம நபரிடம் இருந்து ஒரு லிங்க் வந்தது. அதில் உங்கள் வங்கி கணக்கு விரைவில் மூடப்பட உள்ளது. அப்படி மூடப்படாமல் இருக்க உங்களது தகவல்களை லிங்க் உள்ளே சென்று பதிவிடுங்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

இதனை நம்பி உதயகுமார் வங்கி கணக்கு அட்டை எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அதில் பதிவிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிற்கு வந்த ஓடிபி எண்ணையும் பதிவு செய்துள்ளார். அதன் பிறகு அவரது வங்கி கணக்கிலிருந்து 2 லட்சத்து 39 ஆயிரத்து 989 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உதயகுமார் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.