எல்லை வரை பரவிய கொரோனா வைரஸ் – முதல் முறையாக ராணுவ வீரருக்கு கொரோனா தொற்று உறுதி!

லேஹ் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த 34 வயது ராணுவ வீரருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

லேஹ் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த 34 வயது ராணுவ வீரருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சோனம் நுர்பு மெமோரியல் மருத்துவமனையில் ராணுவ வீரர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அதே மருத்துவமனையில் அவரது சகோதரி, மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 147பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.