டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கூலி தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கட்டுமாவடி நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் மணமேல்குடி பகுதியில் சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது ராஜாவின் மோட்டார் சைக்கிள் பலமாக மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.