காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹரீஷ் ராவத் ராஜினாமா …..!!

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஹரீஷ் ராவத் ராஜினாமா செய்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை தொடர்ந்து அக்கட்சியின் பல்வேறு மாநில  நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.இதையடுத்து ராகுல் காந்தியும் தலைவர் பொறுப்பை செய்வதாக கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு கடிதம் கொடுத்தார். ராகுலின் ராஜினாமா முடிவை ஏற்க மறுத்த கட்சி தலைமை ராகுல் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியது.அதே போல பல்வேறு மாநில காங்கிரஸ் முதல்வர்களும் ராகுலே தலைவராக  தொடர வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

Image result for ஹரீஷ் ராவத்

ஆனாலும் ராஜினாமா முடிவில் உறுதியாக இருந்த ராகுல்  ராஜினாமா செய்வதற்கான 4 பக்க அறிக்கையை வெளியிட்டார். மேலும் அதில் தோல்விக்கு பலரை பொறுப்பாக்க வேண்டும் , கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவே புதிய தலைவரை தேர்ந்தெடுங்கள் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹரீஷ் ராவத் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்துள்ளார்.