டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது….!!

மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 

12வது  ஐ.பி.எல் தொடரின் 15-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பையில்  உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக குவிண்டன் டிகாக்கும், ரோஹித் சர்மாவும் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.