சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி மகிந்து கொண்டாடினர்.
நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை சுமார் ரூ 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்தது. இன்று மதியம் 2.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

அப்போது அங்கு கூடி இருந்த விஞ்ஞானிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர் விண்ணில் ஏவப்பட்ட 16 நிமிடங்களில் சந்திராயன்-2 விண்கலம் புவி வட்டப் பாதையைசென்றடைந்தது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கைதட்டி , தின வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்து கொண்டனர்.