BREAKING : கொரோனா- இந்தியாவில் 2ஆவது உயிரிழப்பு …..!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தலைநகர் டெல்லி , தமிழகம் உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் என 70க்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்தியாவில் 2ஆவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 29 ம் தேதி சவூதி அரேபியாவிலிருந்து கர்நாடக மாநிலம் கல்புர்க்கி வந்த 76 வயதான முகமத் சித்திக் உசேன் என்பவர் முதல் பலி உறுதியாகிய நிலையில் இந்தியாவில் மேலும் ஒரு உயிரிழப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற 69 வயது மூதாட்டி உயிரிழப்பு  என்று டெல்லி சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. மூதாட்டியின் மரணத்தையடுத்து கொரோனாவால் இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.