அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தற்போது ஓ. பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அதிமுக கட்சியில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு இடையே தலைமையை கைப்பற்றுவதில் தீவிர போட்டி இருக்கும் நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வர இருப்பதால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு அபாயம் இருக்கிறது.