பாலபுரஸ்கார் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ரேவதி என்ற ஈஎஸ் ஹரிகரன் தற்போது காலமானார். இவர் கேரளாவில் உள்ள பாலகோட்டை பூர்வீகமாகக் கொண்டவர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி பால புரஷ்கார் விருது பெற்ற இவர் சென்னையில் வசித்து வந்தார். இவர் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள வீட்டில் சற்று முன் மரணமடைந்தார். மேலும் இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.