இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள கீழ் மொரப்பூர் குதியில் கூலித் தொழிலாளியான வெங்கடேசன் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு வாகனம் இவரின் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.