பெண்மைக்கு பெருமை சேர்த்த பாரதி கண்ட புதுமைப் பெண்ணை பாரத அன்னை உச்சி முகர்ந்து வாழ்த்துகிறார் என்று பி.வி.சிந்துவுக்கு தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இறுதிப் போட்டி நடைபெற்றதால் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதையடுத்து வீராங்கனை பி.வி சிந்து_க்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது ட்வீட்_டர் பக்கத்தில் பி.வி சிந்து_க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பெண்மைக்கு பெருமை சேர்த்த பாரதி கண்ட புதுமைப் பெண்ணை பாரத அன்னை உச்சி முகர்ந்து வாழ்த்துகிறார் என்று பி.வி.சிந்துவுக்கு தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் தங்க மங்கை P.V.சிந்து அவர்களின் வெற்றி சாதனைகள் தொடர தமிழக பாஜகவின் வாழ்த்துக்களும்.,பாராட்டுக்களும்.,#PVSindhu#BWFWorldChampionships2019
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 25, 2019