வந்த வேகத்தில் வெளியேறிய வீரர்கள்….. பரிதாப நிலையில் பெங்களூரு அணி…… 10 ஓவர் முடிவில் 44/6….!!

பெங்களூரு அணி 10 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 44 ரன்களுடன் விளையாடி வருகிறது.  

ஐபிஎல் 11-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ்      பெங்களூரு  அணிகளுக்கிடேயேயான  போட்டி   ஹைதெராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் பேர்ஸ்டோ 56 பந்துகளில் 114 ரன்கள் (7 சிக்ஸர், 12 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார்.மற்றொரு தொடக்க வீரரான வார்னர் 55 பந்துகளில் 100* ரன்கள் (5 சிக்ஸர், 5 பவுண்டரி) விளாசினார். மேலும் விஜய் சங்கர் 9, யூசுப் பதான் 6* ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான பார்த்திவ் பட்டேலும், ஹெட் மேயரும்,களமிறங்கினர். பார்த்திவ் பட்டேல் 11 ரன்னில் ஆட்டமிழக்க அதைத் தொடர்ந்து ஹெட் மேயர் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து டிவில்லியர்ஸ் 01, விராட் கோலி 03, மொயின் அலி 02, துபே 04, என வரிசையாக வந்த வேகத்தில் நடையை கட்டினார். இதையடுத்து ப்ரயாஸும், கிராண்ட்ஹோமும் தட்டி தட்டி ரன்களை சேர்த்து வருகின்றனர்.