“வீட்டில் யாரும் இல்லாத நேரம்” ஆட்டோ ஓட்டுனர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!

ஆட்டோ ஓட்டுநர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கவரைப்பேட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் அன்பு வசித்து வந்துள்ளனர். இவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா மற்றும் தங்கையை திருமணம் செய்து கொண்டார். எனவே இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அன்பு அங்கு உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.